×

செக்ஸ் தொல்லைக்கு டுவிட்டர் மூலம் ஆப்பு வைத்த நடிகை!!

செக்ஸ் தொல்லைக்கு டுவிட்டர் மூலம் ஆப்பு வைத்துள்ளார் நடிகை சஞ்சனா.
கன்னடத்தில் முன்னணி நடிகையான சஞ்சனா தமிழில் ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு கன்னட உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு மர்ம ஆசாமி ஒருவன் தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.

மேலும் நள்ளிரவில் மொபைல் மூலம் சஞ்சனாவிடம் ஆபாசமாக பேசி தொந்தரவு கொடுத்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து இந்த நபருக்கு பாடம் புகட்ட நினைத்த சஞ்சனா அவரின் மொபைல் நம்பரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த நம்பருக்கு சொந்தமான நபர் தினமும் நள்ளிரவில் எனக்கு போன் செய்து ஆபாசமாக பேசி தொல்லை கொடுக்கிறார், உண்மையான ரசிகர்கள் இவருக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என அன்புக்கட்டளையும் இட்டுள்ளார்.

இதனைத் பார்த்த சஞ்சனாவின் ரசிகர்கள் அந்த மர்ம நபரை தொடர்பு கொண்டு கேவலமான வார்த்தைகளால் திட்டி தீர்த்ததோடு மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்கள்.

இந்த மிரட்டலுக்கு பயந்த நபர் சஞ்சனாவுக்கு போன் செய்து ‘என்னை மன்னித்து விடுங்கள்’ இனிமேல் ஆபாசமாக பேசமாட்டேன் என்றும் என் கைப்பேசி நம்பரை டுவிட்டரில் இருந்து நீக்கி விடுங்கள் எனவும் கூறியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து அந்த நபரின் மொபைல் நம்பரை நீக்குவது தொடர்பாக யோசித்து வருகிறாராம் சஞ்சனா.