×

லண்டன் சென்ற நடிகையை பின்தொடர்ந்து தனுஸ், சிம்பு!!

பிரபல நடிகர்கள் ஓய்வில் இருக்கும்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா போவது கோலிவுட்டில் சகஜம். அஜீத், விஜய் போன்ற பிரபலங்கள் ஒவ்வொரு படம் முடிந்தவுடன் குடும்பத்துடன் ஏதாவது ஒரு நாட்டிற்கு சென்று ஓய்வு எடுப்பார்கள்.
ஆனால் தற்போது மூன்று பிரபலங்கள் பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில் திடீரென லண்டன் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். இது கோலிவுட்டில் பெரும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
அந்த மூன்று பிரபலங்கள் தனுஷ், சிம்பு, மற்றும் அனிருத். தனுஷ் தற்போது வேலையில்லா பட்டாதாரி என்ற படத்திலும், அனேகன் படத்திலும் பிஸியாக உள்ளார். அதேபோல சிம்பு, கவுதம் மேனன் படத்தில் நடிக்க புதிதாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அதுபோக நயன் தாராவுடன் பாண்டிராஜ் படத்திலும் ஏற்கனவே அரைகுரையில் உள்ள வாலு, வேட்டை மன்னன் படத்திலும் பிஸியாக உள்ளார். அனிருத்தை பற்றி கேட்கவே வேண்டாம். சாப்பிடக்கூட முடியாத அளவுக்கு அவர் பிஸி.
ஆனால் இந்த மூன்று பிசி நடிகர்களும் திடீரென லண்டனுக்கு கிளம்பியுள்ளார்கள். இது கோலிவுட்டை சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கோலிவுட்டில் சிலர் அதிர்ச்சியடைய முக்கிய காரணம் என்னவென்றால், தமிழ் சினிமாவை பரபரப்பாக்கிய ஒரு முக்கிய நடிகையின் ஷூட்டிங் லண்டனில் நடந்து கொண்டிருக்கின்றது. அவர் இன்னும் ஒரு மாதம் அங்குதான் தங்கியிருப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த நேரத்தில் மூவரும் லண்டன் கிளம்பியுள்ளதுதான் கோலிவுட்டின் சந்தேகத்திற்கு முக்கிய காரணம். வரும்போது நான்கு பேர்களும் சேர்ந்து வருவார்களோ? என கோலிவுட் சஸ்பென்ஸுடன் எதிர்பார்க்கிறது.