×

சலிப்பில் பிந்து மாதவி!!

கிராமத்து பெண் வேடம் என்றாலே ஒரே சலிப்பாக உள்ளது என்று கூறியுள்ளார் பிந்து மாதவி.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் கிராமத்து பெண்ணாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பிந்து மாதவி.

தற்போது ‘ஒரு கன்னியும் மூன்று களவானிகளும்’ படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படம் குறித்து அவர் கூறுகையில், கண்கள் கவர்ச்சியாக இருக்கிறது. கிராமத்து பெண்ணாக நடிக்க பொருத்தமான தோற்றம் என்று வரிசையாக தாவணி, சேலை அணிந்து நடித்து வந்தேன்.

ஆனால் இயற்கையாகவே நான் நகரத்து பெண்தான். அதுபோல் வேடத்துக்காக காத்திருந்தேன். ஒரு வழியாக நகரத்து பெண்ணாக நடிக்கிற சான்ஸ் கிடைத்துவிட்டது.

இந்த கதாபாத்திரத்தில் நகரத்து பெண் என்றாலும் கவர்ச்சி தூக்கலான கதாபாத்திரம் இல்லை என்றும் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.