நாளுக்கு நாள் ‘பாஹுபலி’ படத்தை பற்றிய புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் பிரம்மாண்ட தெலுங்கு படம் பாஹுபலி.
பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ் முதலானோர் நடித்து வரும் இந்தப் படம் சரித்திர கதைப் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் பிரம்மாண்ட அரங்க அமைப்புகள், வியக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகி வர, படத்தில் நடக்கும் ஒரு போர் காட்சிக்காக 2000 துணை நடிகர்களுக்கு ஆறு மாதக் காலம் போர் பயிற்சி அளித்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
இந்தப் படம் தமிழிலும் மஹாபலி என்ற பெயரில் வரவிருக்கிறது.