×

ரூ.100 கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினாரா சூர்யா? அதிர்ச்சி தகவல்!!


ஆந்திராவில் உள்ள ABN என்ற ஊடக நிறுவனம் ஒரு மிகப்பெரிய ஆபரேஷனில் சென்ற வாரம் ஈடுபட்டது. அது என்னவென்றால் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் அண்டர்கிரவுட் ஆட்களிடம் ரகசியமாக சென்று யார் யார் இந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை உளவு பார்த்தனர். இதில் அவர்களுக்கு சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கருப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றுவதில் TRS நிறுவனர் சந்திரசேகர ராவ், சிரிசில்லா தொகுதியில் எம்.எல்.ஏ மற்றும் கே.ஆர். ராஜசேகர ரெட்டியின் மகன் ஆகியோர் அடிக்கடி கருப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றுவது தெரியவந்துள்ளது. ஆனால் இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைய செய்யும் ஒரு செய்தி என்னவென்றால் இந்த வேலையில் அடிக்கடி நடிகர் சூர்யாவும் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதுவரை ரூ.100 கோடி வரை கருப்புப் பணத்தை வெள்ளையாக சூர்யா மாற்றியுள்ளாராம். வெள்ளையாக மாற்றுவதற்கு சூர்யாவின் சார்பில் அவருடைய தங்கை செயல்படுவதாகவும் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆந்திர தொலைக்காட்சியில் இந்த தகவல் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது.