நடிகை நஸ்ரியா, பஹத் பாசில் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 8ஆம் தேதி விமரிசையாக நடந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி திருமண தேதியும் குறித்தாகிவிட்டது இந்நிலையில் நஸ்ரியாவின் திருமணத்தை அவரது முன்னாள் காதலர் ஒருவர் நிறுத்த முயற்சிப்பதாக வந்த தகவலை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.
சிறுவயதில் தன்னுடன் படிக்கும் இளைஞர் ஒருவரை காதலித்ததாகவும், அவருடன் பள்ளி கல்லூரிகளில் படிக்கும்போது பல இடங்களில் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. அந்த வாலிபரை சினிமாவுக்கு வந்தவுடன் நஸ்ரியா தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நஸ்ரியா நிச்சயதார்த்தம் குறித்து கேள்விப்பட்ட அந்த இளைஞர் நஸ்ரியாவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டல் குறித்து கூறும் நஸ்ரியா, தான் சிறுவயதில் யாரையும் காதலிக்கவில்லை என்றும்,தனது திருமணத்தை நிறுத்துவதற்காக யாரோ மர்ம நபர்கள் செய்யும் சூழ்ச்சிதான் இது என்றும் கூறினார்.
இந்த மிரட்டலால் பஹத் பாசில் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
