×

ஹன்சிகா கையை பிடித்து இழுத்து சிம்பு ரசிகர்கள் தாக்குதல். கோவா கடற்கரையில் பரபரப்பு.!!



ஹன்சிகா இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதனால் கோவாவில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்களுக்கு அடையாளம் தெரியாது என எண்ணி கோவா கடற்கரையில் உயிரே உயிரே என்ற படத்தின் படப்பிடிப்பை நேற்று படக்குழுவினர் நடத்தினர். ஆனால் அங்குள்ள தமிழ் ரசிகர்கள் ஹன்சிகாவை அடையாளம் கண்டு அவர் கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்ததோடு, இவர்தான் சிம்புவை ஏமாற்றிய நடிகை என்று கூச்சலிட்டவாறே அவரை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிம்பு ரசிகர்கள் என சொல்லப்படும் நான்கு இளைஞர்கள் கோவா கடற்கரையில் ஹன்சிகாவின் பாடல் காட்சி படப்பிடிப்பை பார்த்தவுடன் ‘இவ தான் நம்ம தலைவர் சிம்புவை ஏமாற்றியவள். இவளை சும்மா விடக்கூடாது என்று கூச்சலிட்டவாறே ஹன்சிகாவின் கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்தனர். அவர்கள் நான்கு பேர்களும் போதையில் இருந்ததால் ஹன்சிகாவிடம் எல்லை மீறி நடந்துகொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அந்த நான்கு இளைஞர்களையும் தடுக்க முயற்சித்தனர். ஆனாலும் அவர்களால் முடியவில்லை. ஹன்சிகாவை தாக்க முற்பட்டனர். இதனால் பயந்துபோன ஹன்சிகா உடனே படப்பிடிப்பு தளத்தை விட்டு காரில் ஏறி தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றுவிட்டார்.
தகவல் அறிந்த போலீசார் வந்தவுடன், அந்த நான்கு இளைஞர்களும் தப்பித்து ஓடிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். ஹன்சிகா தங்கியிருக்கும் ஓட்டலுக்கு அந்த இளைஞர்கள் வரக்கூடும் என்ற அச்சத்தால் அவருக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நாளை படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.