×

இதான் பிரியாணி கதை

கார்த்தி, ஹன்ஷிகா, பிரேம்ஜி என மூன்று பேரும் ஒரே சாப்ட்வர் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள், வார இறுதியில் டிஸ்கோ, பார்ட்டி என்று அலைபவர் கார்த்தி.

கார்த்திக்கிற்கு ஒரு கெட்ட பழக்கம். பார்ட்டியில் சரக்கு அடித்துவிட்டால் வயிறு முட்ட பிரியாணி சாப்பிட வேண்டும். ஒரு சனிக்கிழமை ஒரு பார்ட்டிக்கு போகிறார்கள். அங்கு பிரியாணி இல்லை. அதனால் எப்படியாவது பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கார்த்தியும், பிரேம்ஜியும் காரை எடுத்துக்கொண்டு ஆம்பூர், அல்லது வாணியம்பாடியில் பிரியாணி சாப்பிட்டு வரலாம் என்று கிளம்புகிறார்கள்.

போன இடத்துல பிரேம்ஜி விளையாட்டாக ஒரு பிரச்னையை இழுத்துவிட சின்ன பிரச்னை பெரும் பிரச்னையாகி இவர்களது உயிருக்கே ஆபத்தாக முடிகிற நிலைமை வருகிறது. அதிலிருந்து இவர்கள் எப்படி எஸ்கேப் ஆகி வருகிறார்கள் என்பது தான் பிரியாணி கதையாம் .