×

ஹன்சிகா, “இப்படியொரு படத்தில் நடிக்க வேண்டுமா?”


‘அரண்மனை’ படத்தில் ஹன்சிகாவை யும் சேர்த்து 3 நாயகிகள் என்பது தெரிந்த விஷயம்தான். “இப்படியொரு படத்தில் நடிக்க வேண்டுமா?” என சிலர் அவரிடம் கேட்டார்களாம். இதுகுறித்து ஹன்சிகா வும் குஷ்புவுடன் பேசியுள்ளார். அதன் பிறகு தெம்பாகிவிட்டாராம்.

“என்னோட பாத்திரம் மிக தெளிவாக உருவாக்கப்பட்டிருக்கு. நான் என் கேரக்டரை நம்புறதை விட சுந்தர்.சியை அதிகமா நம்புறேன். எனக்குரிய முக்கியத்துவத்தை அவரால் தர முடி யும்,” என்கிறார் ஹன்சிகா. ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய விஷயம் தெரியும். கோவில் கட்டியவர்கள் அண்மையில் நேரில் சந்தித்தனராம்.

மதுரை அருகே ஜனவரி 13ம் தேதி அக்கோவிலுக்கு திறப்பு விழாவும் ஏற்பாடு செய்திருந்தனராம். ஆனால் இப்படிச் செய்வது தவறு என்று அறிவுரை சொல்லி அனுப்பி விட்டாராம்.