தென்னிந்திய திரைபட நடிகரும், ஈழத்து கவிஞர் மற்றும் சமூக சிந்தனையாளரான ஜெயபாலன் இன்று வவுனியா - மாங்குளம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த இவர் வௌிநாட்டில் சென்று குடியேறியவராவார். தற்போது சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் வீசா நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி தேசிய விருது பெற்ற “ஆடுகளம்“ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் விருதும் பெற்றிருந்தார்.
ஜெயபாலன், அண்மைய நாட்களை தமிழகத்திலேயே அதிகம் கழித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையைச் சேர்ந்த இவர் வௌிநாட்டில் சென்று குடியேறியவராவார். தற்போது சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் வீசா நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி தேசிய விருது பெற்ற “ஆடுகளம்“ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் விருதும் பெற்றிருந்தார்.
ஜெயபாலன், அண்மைய நாட்களை தமிழகத்திலேயே அதிகம் கழித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.