
காதலர் தினத்தில் சென்னை மெரீனாவில் காதலர்கள் குவிந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டிக் கொண்டனர். பரிசுப் பொருட்களை பரிமாறிக்கொண்டனர். வாழ்த்து அட்டைகளையும் கொடுத்தனர். ஒரு சிலர் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி அத்து மீறலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு வந்த பொதுமக்கள் முகம் சுளித்தனர். ஒரு சிலரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
| |
