×

என் இளமையை ஐந்தாண்டுகள் அனுபவித்தார். பிரபல நடிகை அதிர்ச்சி புகார்.


சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதா, தொழிலதிபர் பைசூல் மீது ரூ.50 லட்ச ரூபாய் நகை மற்றும் பணத்தை கொடுத்து ஏமாந்ததோடு, அவரிடம் தன் இளமையை ஐந்தாண்டுகள் பறிகொடுத்துவிட்டு தற்போது நிர்க்கதியில்லாமல் நிற்பதாக புகார் கூறியுள்ளார்.
தொழிலதிபர் மீது ராதா கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்த தொழிலதிபர் பைசூல், தான் நிரபராதி என்றும், நடிகை ராதா தன்மீது வீண்பழி சுமத்துகிறார் என்றும் கூறியதோடு, அவரிடம் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தது உண்மைதான். ஆனால் நான் அவரிடம் ரூ.80லட்சத்திற்கு மேல் கொடுத்து ஏமாந்ததும் உண்மை என்று திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளர். மேலும் ராதாவுக்கு ஏற்கனவே பல நபர்களிடம் தொடர்பு உண்டு என்றும் அந்த பல நபர்களுள் நானும் ஒருவன் என்றும் கூறிய அவர், ராதாவுக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை உள்ளது என்றும், அந்த குழந்தை யாருக்கு பிறந்தது என்பதை ராதா விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதை மறுத்து கூறிய ராதா, எனக்கு குழந்தை இருப்பதாக பைசூல் அபாண்டமாக கூறுகிறார். நான் அவரைத் தவிர யாரிடமும் உடல்ரீதியான உறவை வைத்திருக்கவில்லை என்றும், எனக்கு எதிராக பைசூல் கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை சட்டரீதியாக நிரூபிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தற்போது பைசூல் முன் ஜாமீன் மனு செய்துள்ளார். மேலும் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டதால் தலைமறைவாகவும் உள்ளார். பைசூலை கைது செய்ய போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்றோ அல்லது நாளையோ அவர் கைது செய்யக்கூடும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.