×

பாண்டிய நாடு சூப்பர், எனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுங்கண்ணா: சுசீயிடம் கூறிய விஜய்

சென்னை: இளையதளபதி விஜய் விஷாலின் பாண்டிய நாடு படத்தை பாராட்டியதுடன் நல்ல கதை இருந்தால் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று இயக்குனர் சுசீந்திரனிடம் தெரிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்த படம் பாண்டிய நாடு. தீபாவளிக்கு ரிலீஸான பாண்டிய நாடு தரத்தில் நன்றாக உள்ளது என்று பெயர் எடுத்துள்ளது. மேலும் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ராஜ் டிவி பெரிய தொகை கொடுத்து விஷாலிடம் இருந்து வாங்கியுள்ளது.

எனக்கு ஒரு கதை?

 விஜய் சுசீந்திரனிடம் தனக்கு ஒரு கதை தயார் செய்யும்படியும், அது பிடித்தால் தான் நிச்சயம் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆக விஜய்-சுசீந்திரன் கூட்டணியில் நிச்சயம் ஒரு படத்தை எதிர்பார்க்கலாம்.


விஜய்

விஜய் பாண்டிய நாடு படத்தை பார்த்துள்ளார். படம் பார்த்த அவருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. உடனே இயக்குனர் சுசீந்திரனை தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

பாராட்டு விஜய்

 பிற நடிகர்களின் படங்களை பார்த்து அது பிடித்துவிட்டால் உடனே சம்பந்தபட்டவர்களை அழைத்து மனதார பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நேரில் வந்த சுசீ விஜய் பாராட்டியவுடன் மகிழ்ச்சியான சுசீந்திரன் உடனே கிளம்பி வந்து இளையதளபதியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.